தியத்தலாவை கார் பந்தய விபத்து : விசாரணைக்கு 7 பேர் அடங்கிய குழு


தியத்தலாவையில் இடம்பெற்ற கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் தலைமையிலான 7 பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தியத்தலாவையில் இடம்பெற்ற “Fox Hill Super Cross 2024” கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments