வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை காணவில்லை


வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது மனைவி நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

வில்வராசா ரக்சன் எனும் 25 வயதுடைய இளைஞனனே காணாமல் போயுள்ளார் 

தாம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே திருமணம் செய்து , வவுனியா வேப்பங்குளம் மெதடிஸ் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வருவதாகவும் , கடந்த 12ஆம் திகதி என்னை பணியிடத்தில் இறக்கி விட்டு, கணவன் தனது பணியிடத்திற்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார் என தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

No comments