சத்தம் சந்தடியின்றி இமாலய பிரகடனம்!



சத்தம் சந்தடியின்றி மீண்டும் மீண்டும் இமாலய பிரகடனத்திற்கு உயிர் கொடுக்க சத்தமின்றி உரிய தரப்புக்கள் மும்முரமாகியுள்ளன.

இந்நிலையில் “மறுசீரமைப்பு மற்றும் மீண்டும் நிகழாதது" என்ற கருத்தியல் றிப்பை மையமாகக் கொண்டு,பிரச்சாரங்களை முன்னெடுக்கும் பாணியில் இரண்டு நாள் பரப்புதல் பட்டறை நடத்தப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு மத குருமார்களின் சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

இமாலயப்பிரகடனத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி, இமயமலைக் கோட்பாட்டின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடரில் சத்தம் சந்தடியின்றி பலரும் பங்கெடுத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.



 

No comments