உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நாடாளுமன்ற கூட்டத்துக்கு 13 கோடி செலவு!

 


”கடந்த மூன்று ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மட்டும் 11 நாட்கள் விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11 நாட்கள் நடைபெற்ற கூட்டத்துக்காக 13 கோடியே இருபது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

 இந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே விடயம் தொடர்பில் அதிகளவான விவாதங்கள் இடம்பெற்றமை இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மற்றொரு மூன்று நாள் விவாதம் இந்த ஆண்டு ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய திகளில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments