ஐஸ் போதைப்பொருளுடன் கான்ஸ்டபிள் கைது!


கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்ட நிலையில் சந்தேகநபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

பின்னர், பொலிஸார் அவரை துரத்திச் சென்று பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சந்தேகநபரிடம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

No comments