கடற்படை அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட நால்வர் போதைப்பொருளுடன் கைது


போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் 2 பேர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 510 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பெறுமதி 7.5 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments