மன்னாரில் விசேட அதிரடி படையினர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடாத்திய மாணவன் கைது


குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய சென்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் , குற்றச் செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார் நிலையில் இருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர்.

இதன் போது மூன்று கூரிய வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பவற்றுடன் 40 வயதான சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட நபரின் உறவினரான  17 வயதுடைய மாணவன் ஒருவர் கூரிய கத்தியால் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதலை நடத்த முயன்றதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இதன் போது காயத்திற்கு உள்ளான விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments