ரணிலுக்கு ஆப்பு:பஸில் சஜித் - கூட்டு!



அடுத்த ஜனாதிபதி கனவில் ரணில் இருக்கையில் புதிய கூட்டிற்கு மொட்டு கட்சி மும்முரமாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் என கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் மக்கள் பலமும் ஒருங்கிணைத்த வலையமைப்பும் கொண்ட காட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமே காணப்படுவதகாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தற்போதைக்கு நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஒரு தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க காணப்படுவதாகவும் பசில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்காது என ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளது.


ஆகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்தாது என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.


ஆனால், பசிலின் தற்போதைய கருத்தானது ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கும் எதிர்பார்ப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது நகர்வுகளை முன்னெடுப்பதை வெளிப்படுத்துகின்றது.

No comments