மூன்று மாதங்களுள் 146 பேர் கைது?

 


இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட சுமார் 146 இந்திய கடற்தொழிலாளர்களையும், அவர்கள் பயன்படுத்திய 18 விசைப் படகுகளையும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் கைப்பற்றியுள்ளதாக  கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்று இரவு கூட சிறிலங்கா கடற்படையினர் இரண்டு இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியதுடன், நெடுந்தீவில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய கடற்தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.


No comments