யாழில். நண்பியுடன் கடலில் நீராட சென்ற சிறுமி உயிரிழப்பு


தனது நண்பியுடன் கடலில் நீராட சென்ற 11 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

சாட்டி பகுதியை சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் (வயது 11) எனும் சிறுமியை உயிரிழந்துள்ளார். 

சிறுமியும் , அவரது நண்பியும் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சாட்டி கடலில் நேற்றைய தினம் சனிக்கிழமை நீராடிக்கொண்டிருந்த வேளை , சிறுமி கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளார். 

உடனடியாக நண்பி கரையில் நின்றவர்களுக்கு தகவல் அளித்த போது , கடலில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை மீட்க முயற்சிகள் எடுத்த போதிலும் , சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

No comments