அரசியலுக்குள் வந்தார் நடிகர் விஜய்: கட்சியின் பெரையும் அறிவித்தார்!!
தமிழ்நாட்டின் முன்னிணி நடிகரான விஜய் அரசியலுக்கு வருவார் என்ற நிலையில் அவர் இன்ற தனது கட்சியின் பெயரை "தமிழக வெற்றிக் கழகம்" அதிகாரபூர்வமாக அறிவித்தார். அவரது கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது கட்சியின் கொள்கைகளை இன்று வெளியிடவில்லை.
மக்களுக்கு முழுமையான சேவையை தொடர அரசியல் அதிகாரம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 25ம் தேதி சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் செயலக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் குறிப்பிட்ட நடிகர் விஜய், தற்போதைய சூழலில் மக்களின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள் உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே அவர் தொடர்ந்து நடிப்பில் ஈடுபடுவாரா என்ற கேள்விக்கும் அவர் இந்த அறிக்கையின்மூலமே பதிலளித்துள்ளார். தான் ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு திரைப்படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப புள்ளி, ஈழப்போர் காலம்தான். போரை நிறுத்த வேண்டும் என்று 2008ல் முழங்கிய விஜய் அதன் பின்னர், இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நாகை மீனவர்களுக்கு ஆதரவாக தனது ரசிகர் மன்றம் மூலம் போராட்டத்தையும் நடத்தினார். அதன் பின்னர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு, தன்னுடைய திரைப்படங்களில் அரசியல் வசனங்களை தெறிக்க விடுவது என அரசியலுக்குள் நுழைய கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்தார்.
நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையை கீழே படிக்க முடியும்
Post a Comment