சாந்தன் ஒரு வாரத்தில் உடுப்பிட்டியில்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார் என சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசின் சார்பில் முன்னிலையான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இத்தகவலை யாழ்ப்பாணத்திலுள்ள சாந்தனின் குடும்பத்தவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
அதனையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கையர்களான முருகன் மற்றும் சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நோய்வாய்ப்பாட்ட சாந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
தனது மகனின் வருகைக்காக கடந்த 30வருடங்களிற்கு மேலாக சாந்தனின் தாயார் போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment