கச்சதீவு செல்ல கடற்படையிடம் அனுமதி பெறவேண்டுமாம்



 கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து 23ஆம் திகதி ஈடுபடுத்தப்படும்.

எனினும் வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் படகுகளில் பயணம் செய்பவர்கள் தனித்தனிப் படகாக பயணம் செய்யாது குழுவாக இணைந்து பாதுகாப்பான முறையில் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவத்தில் இலங்கையிலிருந்து 4ஆயிரம் பேரும் தமிழகத்திலிருந்து 4ஆயிரம் பேருமாக எண்ணாயிரம் பேர் பங்கெடுப்பரென எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் கடந்த ஆண்டில் கடற்படையினரால் விசேடமாக அழைக்கப்பட்டிருந்த சிங்கள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 


No comments