டக்ளஸ் கதிரையை கைவிட்டார்?
இலங்கை மீனவர்களிற்காக தான் வகித்து வரும் மீன்பிடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசிடமிருந்து இலங்கை அரசிற்கு மீனவர்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமானால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீனவ மக்களுடன் இணைந்து கடலில் போராடப்போவதாகவே கடத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய தூதுவரின் யாழ்.விஜயத்தின் போது அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதனை அவர் தவிர்த்திருந்தார்.இந்நிலையில அமைச்சர் ஆதரவு மீனவ அமைப்புக்கள் யாழிலுள்ள துணைதூதரகத்தை முடக்கி போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.
இந்நிலையில் அவசர அவசரமாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அழைக்கப்பட்ட அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தூதர் சந்திருந்தார்.
எனினும் சந்திப்பில் இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து கலந்துரையாடினோம். முக்கியமாக சமீபத்தில் ஜேவிபி கட்சியின் தலைவர் புதுடெல்லிக்கு சென்று இருந்தார். ஆனால் அவர் அங்கு எமது கடல் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. அதைவிட வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கடந்தவாரம் இந்திய தூதுவர் சந்தித்திருந்தார். அங்கு கூட நமது கடல் தொழில் மக்களின் பிரச்சினைகள் குறித்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எவற்றையும் சொல்லவில்லை.
ஆனால் இந்திய மீனவர்களது அத்துமீறலை தொடர்வதற்கான அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுமாக இருந்தால் நான் அமைச்சரவையில் இருந்து இராஜிநாமா செய்துவிட்டு, எமது கடல் தொழிலாளர்கள் இணைந்து கடலில் அதனை எதிர்ப்பதற்கு தயாராக உள்ளேன் என தெரிவித்ததாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Post a Comment