சாட் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்


மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சாட் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான யாயா டில்லோ அந்நாட்டின் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைநகர் என்டிஜமீனா (N'Djamena) வில் உள்ள அவரது கட்சியின் தலைமையகத்திற்கு அருகே புதன்கிழமை கடுமையான துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

யாயா டில்லோஅவரது கட்சியின் தலைமையகத்தில் சரணடைய விரும்பவில்லை. அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பின் அவர் கட்சி அலுவலகத்தில் இறந்துகிடந்தார்.

தில்லோ 2021 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் அவரது உறவினரான ஜனாதிபதி மஹமத் டெபியை கடுமையாக எதிர்ப்பவர். 

மூன்று தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த பிறகு கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட அவரது தந்தைக்குப் பிறகு  மஹமத் டெபி பதவியேற்றார்.

மே 6ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய  நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது.

இந்த தேர்தல்கள் நாட்டை மீண்டும் அரசியலமைப்பு ஆட்சிக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

No comments