மட்டக்களப்பு ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது


மட்டக்களப்பு தொடருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது தொடருந்து சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் தொடருந்து சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக தொடருந்துப் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்தப்  பாதை ஊடான  தொடருந்துக்களை  இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மட்டக்களப்புக்கான இரவு தபால் தொடருந்துச் சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments