பப்புவா நியூ கினியில் அவசரகால நிலை பிரகடனம்: 15 பேர் பலி!!


பப்புவா நியூ கினியா நாட்டின் 2 பெரிய நகரங்களாக போர்ட் மோர்ஸ்பி மற்றும் லே ஆகியவை உள்ளது. இந்த 2 நகரங்களில் நேற்று திடீரென கலவரம் வெடித்தது. இதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பப்புவா நியூ கினியாவில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் வியாழனன்று இரண்டு வார அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார் பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்.

பிரதமரின் உத்தரவில், 1,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் தேவையான இடங்களில் செல்ல" தயார் நிலையில் இருப்பதாகக் கூறுகிறது.

தற்போது, நகரத்தில் பதற்றம் தணிந்துள்ளதாகக் காட்டுகிறது.

No comments