கும்பலோடு கோவிந்தா:நாம் தயாரில்லை!
வடக்கிற்கான அபிவிருத்தி எனும் பேரில் முன்னெடுக்கப்படும் நாடகங்களில் பங்காளிகளாக எம்மையும் காண்பிப்பதனை ஏற்கமுடியாது.வெறுமனே தமது ஆதரவாளர்களிற்கு உதவி வழங்கும் திட்டமாக வடக்கு அபிவிருத்தியை முன்னெடுப்பதை ஏற்கமுடியாமெனவும் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வடக்கிற்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விசேட அபிவிருத்தி குழுக்கூட்டத்தை நடத்தியிருந்தார்.
அக்கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் 2024 ஆண்டுக்கான இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இன்று சூம் செயலி ஊடக கூட்டமொன்று நடத்தப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சூம் செயலி ஊடான கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கூட்டத்தில் கருத்து வெளியிடுகையில் நாமும் கூட்டங்களில் பங்கெடுப்பதாக காண்பிக்கப்படும் நாடகங்களில் பங்காளிகளாக எம்மையும் காண்பிப்பதனை ஏற்கமுடியாதென தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.
Post a Comment