சுவிட்சர்லாந்து துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி!! மேலும் ஒருவர் காயம்! தாக்குதலாளி கைது!
சுசிட்சர்லாந்தின் தெற்கு நகரில் உள்ள சியோன் நகரத்தில் இன்று திங்கட்கிழமை நடத்த துப்பாப்கிதாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார் எனக் காவல்துறையினர் தெரவித்தனர்.
இத்துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இத்துப்பாக்கிச் சூடு காலை 8மணியளவில் நடந்துள்ளனது. சுமார் 35,000 மக்கள் வசிக்கும் சியோனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அவர் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றவாளி என்று கருதப்படும் 36 வயதுடைய நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர் என்று காவல்துறை கூறியது. எந்த சூழ்நிலையிலும் (பொது உறுப்பினர்கள்) அவரைத் தடுக்கவோ அல்லது அவரை அணுகவோ முயற்சிக்கக்கூடாது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
தற்போது தாக்குதலாளியைப் பிற்பகல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுமார் 9 மில்லியன் மக்கள் வசிக்கும் சுவிட்சர்லாந்தில், துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். பொதுமக்களில் சுமார் 2.3 மில்லியன் மக்கள் துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள் என்று ஸ்மால் ஆர்ம்ஸ் செய்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
Post a Comment