யாழ். இளைஞன் கொழும்பில் சடலமாக மீட்பு


வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது. 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் (வயது 28) இளைஞர் என தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவரின் உடலில் சிவப்பு நிற சிராய்ப்பு அடையாளங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments