நல்லூர் மானம்பூ உற்சவம்


நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி இறுதி நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.

காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று, குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாகஇடம்பெற்றது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானின் அருட்காட்சியை கண்டு களித்தனர். 





No comments