தமிழக கடற்தொழிலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் துன்பியல் சம்பவம்


தமிழக கடற்தொழிலாளர்கள் கடலில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் ஒரு துன்பியல் நிகழ்வு என வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் க.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழக கடற்தொழிலாளர்கள் மீது கடலில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிந்தோம். அது இங்குள்ள சிலரின் தூண்டுதலாலையே நடைபெற்றது. அதற்காக நாம் மனவருத்தத்தை தெரிவிப்பதுடன், அதொரு துன்பியல் சம்பவமாகும் என்றார்.


No comments