நெடுந்தீவில் 19 கடற்தொழிலாளர்கள் கைது


இலங்கை கடற்பரப்பின் நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்தொழிலாளர்கள் 19 பேர் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்போது, அவர்களின் 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்த கடற்படையினர், அவர்களை  நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments