நெல்லியடியில் வாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது


யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய 33 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை பொலிஸ் விசேட  அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 3 வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன என்றும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சந்தேக நபரை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர். 

No comments