கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்போம்


கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க, அடுத்த மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் முகாம் அருகே மீனவர் நல மாநாடு இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண பா.ஜ.க அரசு என்ன செய்துள்ளது.

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 5000 இருந்து 8000 ஆக வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட வயதான மீனவர்களுக்கு நிவாரண தொகை மீன்பிடி தர காலத்தில் வழங்கப்படும்.

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து கச்சதீவு இலங்கை அரசில் இருந்து மீட்டு தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டப்படும்” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டார்.

No comments