13: கஸ்ட காலம்?



 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இந்தியா அழுத்தங்களை பிரயோகித்து வருகையில் சிங்கள தரப்புக்களை தொடர்ந்து முஸ்லீம் தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது.

முஸ்லீம்களின் காணிகளை பராமரிப்பதற்கு தடையாக இருப்பவர்கள், முஸ்லீம்களின் கச்சைத் துணிகளைகூட உருவிவிட்டு அனுப்பக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் முஸ்லீம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகளை பெற்றுத்தருவார்கள் என்று எதிர்பார்ப்பு நிராசையாக போய்விட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசாணக்கியன் போன்ற அரசியல்வாதிகள் இன்று களத்திலே இறங்கி, இனவாதத்துடன் செயல்படுகின்றனர்.

நாங்கள் சட்டம் திருத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் கிழக்கிலிருந்து எழுந்துள்ள எதிர்ப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.


No comments