மிஹிந்தலையில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூவர் உயிரிழப்பு


மிஹிந்தலை தம்மன்னாவ வாவியின் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடிக்கச் சென்ற மூன்று கடற்தொழிலாளர்களே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை சுமார் ஏழு பேர் கொண்ட குழுவொன்று தம்மன்னாவ வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

44 மற்றும் 46 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தம்மன்னாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments