மானிப்பாயில் வெடிபொருட்கள் மீட்பு


யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மானிப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , அதன் உரிமையாளர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (04.07.23)  குழி ஒன்றினை தோண்டிய போதே அதனுள் ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன.

அதனை அடுத்து , மானிப்பாய் காவற்துறையினருக்கு , காணி உரிமையாளர் அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் குழியினை மேலும் தோண்டி ஆயுதங்களை மீட்டனர்.

No comments