நடுவானில் மோதிய விமானங்கள்: வானோடிகள் உயிரிழப்பு


கொலம்பியா நாட்டில் பயிற்சியின் போது நடுவானில் கொலம்பிய விமானப்படையின் விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் விமானத்தில் இருந்த 2 வானோடிகள் உயிரிழந்தனர்.

கடந்த சனிக்கிழமை அன்று அபியாய் விமானப்படை தளத்தில், கொலம்பிய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் வானோடிகள் சாகச பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக 2 விமானங்கள் ஒன்றோடொன்று மோதி தீப்பற்றியது.

இந்த விபத்தில் 2 விமானங்களில் பயணித்த வானோடிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments