யாழில் மாணவியை தாக்கிய அதிபர் கைது


யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.

 குறித்த சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு பொலிஸாரிடம் வினாவிய போது, தாம் அதிபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும், நாளைய தினம் திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விசாரணைகளை நாளைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

No comments