சர்வதேச நியமப்படியே அகழ்வு!



சர்வதேச நியமங்களை பின்பற்றி  முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுமென சட்டவைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற மனித புதைகுழி தொடர்பான விசேட கலந்துரையாடலில் சட்ட வைத்திய அதிகாரிகள் ஏற்பாடுகள் தொடர்பில் அறிவித்துள்ளனர்.

புதைகுழி அகழ்வு சர்வதேச நியமங்களை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே சட்ட வைத்தியர்களுக்கு தயாரிக்கப்பட்ட பணிக்கோவைக்கு அமைவாக அகழ்வை மேற்கொள்ள தீர்மானிக்கப்படடுள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை(6) இடம்பெற்ற நிலையில் மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அன்றைய தினம் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எழும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில், மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

அதேநேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உட்பட சில சான்றுப் பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

அன்றைய அகழ்வில் 13 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்னும் பல இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


No comments