வவுனியாவில் இன்றும் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞன் சடலமாக மீட்பு


வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

அதே பகுதியை சேர்ந்த சற்குணராசா டிசாந்த் (வயது 21) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞருக்கு அருகே கட்டுத் துப்பாக்கியும்  அவ் இளைஞரின் மோட்டார் சைக்கிளும் காணப்பட்ட நிலையில் இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார், சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments