45 பைகளில் மனித எச்சங்களைக் கண்டுபிடித்தனர் மெக்சிக்கோ காவல்துறையினர்


மெக்சிக்கோவில் கடந்த வாரம் காணாமல் போன 7 இளம் தொழிலாளர்களைத் தேடும் நடடிவக்கையின் போது, மனித உச்சங்களுடன் பல பைககளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை குவாடலஜாராவின் மேற்கு நகரத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள மிராடோர் டெல் போஸ்க் என்ற இடத்தில் துண்டிக்கப்பட்ட உடல்களைக் கொண்ட நாற்பத்தைந்து பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

45 பைகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் எச்சங்கள் இருப்பதாக முதற்கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அரசு வழக்கறிஞர் அலுவலகம், எச்சங்கள் காணாமல் போன ஏழு தொழிலாளர்களுடையதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை ஆனால் அவர்களைத் தேடும் பணி நடந்து வருவதாக அறிவித்தார்.

மெக்சிகோவில், குறிப்பாக குவாடலஜாரா போன்ற போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் நிறைந்த நகரங்களில் காணாமல் போன குற்றங்கள் பொதுவானவை. கடந்த ஆண்டு மே மாதம், உள்துறை அமைச்சகம் 100,000 க்கும் அதிகமானோர் காணாமல் போனதாக அறிவித்தது.

2006 ஆம் ஆண்டு போதைப்பொருள் மீதான போர் தொடங்கியதில் இருந்து மெக்சிகோவில் வன்முறை பரவி வருகிறது, அதன்பிறகு 350,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

No comments