போப் பிரான்சிஸ் அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து வருகிறார்: வத்திக்கான்


ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ், குடலிறக்க அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து வருவதாக ஹோலி சீ செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்தார்.

புதன்கிழமையன்று ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் போப் மூன்று மணிநேரம் திறந்த வயிற்று அறுவை சிகிச்சையை பொது மயக்க மருந்து மூலம் மேற்கொண்டார். தற்போது திரவ உணவை அவர் உண்ணுகின்றார். குறைந்தது ஐந்து நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவரது வயது மற்றும் சமீபத்திய நோய்களால் குணமடையும் நேரத்தை நீட்டிக்க முடியும் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கையாக ஜூன் 18 வரை திட்டமிடப்பட்ட அனைத்து பார்வையாளர்களையும் வத்திக்கான் இரத்து செய்துள்ளது.

போப் பிரான்சிஸ் ஒரு அமைதியான இரவைக் கடந்தார். மேலும் நீண்ட ஓய்வு எடுக்க முடிந்தது. அவர் பொதுவாக நல்ல நிலையில் இருக்கிறார். விழிப்புடன் இருக்கிறார் மற்றும் உதவியின்றி சுவாசிக்கிறார் என்று வத்திக்கான் கூறியது. 

தலைமை மருத்துவரான செர்ஜியோ அல்ஃபீரி புதன்கிழமை, இந்த செயல்முறைக்குப் பிறகு போப் விழித்திருந்தார். எச்சரிக்கையாக இருந்தார். மீண்டும் அவர் நகைச்சுவையாக இருந்தார் என்று கூறினார். 

அவர் இரண்டு மயக்க மருந்துகளை செலுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சிஸ் தனது குடல் அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளாததால் சிரமங்கள் இருக்கலாம் என்ற கவலையை மருத்துவர் கூறினார்.

இதற்கிடையில், போப் பிரான்சிஸ் தனது அனைத்து நலம் விரும்பிகள் குறித்தும் தெரிவிக்கப்படுகிறார் என்று புருனி கூறினார். போப்பாண்டவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார், ஆனால் அவரது ஆரோக்கியத்திற்காக மேலும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

No comments