டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு

12.05.2023 வெள்ளிக்கிழமை மாலை 18:30 மணிக்கு டென்மார்க் சேலண்ட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வேல்முருகன் ஆலயத்தில் மிகவும்

உணர்வெழுச்சியுடன் பொதுமக்களால், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் போது உயிர்நீத்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு வழிபாடும் நினைவேந்தல் நிகழ்வும் நடாத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் தங்கள் கைகளில் நெய்விளக்கேந்தி நெஞ்சினில் மரணித்தவர்களின் நினைவை உணர்வுடன் சுமந்து வழிபட்டு சென்றனர்.

No comments