பல்கலைக்கு ஆட்கள் நியமனம்!




இலங்கையில் அரச சேவைகளிற்கு நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments