திருமலை விமானப்படைக்குள்ளும் இந்தியா

 


இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரிக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு அளித்து வரும் இந்திய விமானப்படை தலைமை அதிகாரிக்கு பிரதமர் தனது நன்றியை தெரிவித்ததாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாட்டு விமானப்படைகளுக்கு இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பின் அடையாளமாக, திருகோணமலை விமானப்படை தளத்தில் நட்புறவு கேட்போர் கூடத்தை கட்டுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருவதாக எயார் மார்ஷல் சௌத்ரி பிரதமரிடம் அறிவித்துள்ளார்.

No comments