நாளை போட்டோ செஸசன்!

 


வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கலிற்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி  பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் - வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக அனைவரும் ஒன்றினைந்து கண்டனப் போராட்டம் ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டள்ளது.

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் அழைப்பின் பேரில் தையிட்டிப்பகுதியில் நாளை போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வீதியில் தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் நாளை புதன்கிழமை ஆர்ப்பாட்டப்போராட்டம் இடம்பெறவுள்ளதுதாக  ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 37வருடங்களிற்கு மேலாக இலங்கைப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலிகாமம் வடக்கில் திட்டமிட்டு பௌத்தவிகாரைகள் அண்மைக்காலமாக உருவாக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments