ரயில் நிலைய பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது




24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் வியாழக்கிழமை வழமையான நேர அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரயில் நிலைய திணைக்களத்தின் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு ஊழல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அதிகாரிகள் நல்ல பதிலை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடுமையான தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments