இலங்கை கிரிக்கெட் அணி மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் - தேடப்பட்டு வந்த நபர் படுகொலை


2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபர் பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக  வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. 

பாலி பயாரா என்ற நபரே பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் எனவும் , அல்கொய்தா அமைப்பு மற்றும் Tehreek-e-Taliban பயங்கரவாத அமைப்புகளில் உறுப்பினராக இருத்தவர் எனவும் அவரை பிடித்து தருபவருக்கு 10.5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் வெகுமதியாக வழங்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு படை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments