தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு


தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கதினரால் அடையாள பணிப்புறக்கணிப்பு இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

இதற்கமைய 5 புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை, பிரதி வணிக பொதுமுகாமையாளர் பதவிக்கு தெரிவு செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.


No comments