வெசாக் தினமான இன்றைய தினம் புத்த சிலைக்கு கீழ் இருந்து சிசு மீட்பு
வத்தேகம எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு கீழ் இருந்து, சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்க்கபப்ட்ட சிசு வத்தேகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலைக்கு கீழ் சிசு ஒன்று காணப்படுதாக பிரதேசவாசிகள் தெரிவித்ததை அடுத்து குழந்தையை மீட்டு வைத்திய சாலை ஒப்படைத்ததாகவும், தெரிவித்த பொலிஸார், குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் குழந்தையை பிரசவித்த தாயை கண்டறிய வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment