வவுனியாவை தொடர்ந்து யாழிலும்!



அரசின் தொடரும் திட்டமிட்ட தமிழ் மக்களிற்கெதிரான நடவடிக்கைகளிற்கு யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தமிழர் மரபுரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் போராட்டம் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறவுள்ள இந்த போராட்டம் அடையாள உண்ணாவிரத் போராட்டமாகவும், கையெழுத்துப் போராட்டமாகவும் இடம்பெறவுள்ளது. போராட்டத்தை தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

ஏற்கனவே வவுனியாவில் உருவாக்கப்பட்டுள்ள பொதுகட்டமைப்பு மக்கள் போராட்டத்திற்கான அழைப்பினை விடுத்துள்ள நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திலும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


No comments