புகையிரதம் தடம் புரள்வு - 16 பேர் வைத்தியசாலையில்


கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

அக்போபுரா புகையிரத நிலையத்திற்கு அருகில் மூன்று புகையிரத பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் புகையிரத உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த விபத்தினால் புகையிரத பாதைகள் சேதமடைந்துள்ளதுடன் , சிலீப்பர் கட்டைகளும் உடைந்துள்ளன. அதனால் புகையிரத பயணங்கள் தடைப்பட்டுள்ளது.







No comments