நாளை முடக்கம்:வீதிகள் எங்கும் படையினர்!


 

இலங்கை அரசாங்கம் முன்வைக்கவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஹர்த்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுமையாக முடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே வடகிழக்கின் அனைத்து நகரங்கள்,சந்திகள் மற்றும் வீதிகள் எங்கும் வழமைக்கு மாறாக பெருமளவு படையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும், நாளையதினம், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு, பூரண ஆதரவு வழங்கியுள்ளது.

ஜனநாயக ரீதியாக போராடுகின்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றார்கள். அந்த வகையிலே புதிதாக உருமாறி வரவிருக்கின்ற சட்டமூலத்தை சர்வதேசம் தலையிட்டு நிறுத்த வேண்டும்.

இலங்கை நாடாளுமன்றத்திலே இந்த சட்டமூலமானது ஒரு நியாயப்படுத்தப்பட்ட சட்டம் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்ககூடாது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முற்றாக எதிர்கின்றது. தொடர்சியாக இவ் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீதான நகர்வுகள் அதனை நடைமுறைபடுத்த முன்னெடுக்கப்படுமானால் வடகிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக மாணவர்களாக முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


No comments