தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்



திருகோணமலை, திருக்கடலூர் மற்றும் விஜிதபுர கிராம தமிழ் -சிங்கள மக்களுக்கிடையில் இன்று மதியம் முதல் பாரிய மோதல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் 6 பொதுமக்கள்  காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  காயமடைந்தவர்கள்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலை கட்டுப்படுத்தும் முகமாக அங்கு காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடற்பரப்பில் தமிழ் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து அப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் மூண்டிருந்தது.

துமிழ் மீனவர்களை இலக்கு வைத்து சிங்கள மீனவர்கள் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஆதரவுடன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 

விஜிதபுர என்ற சிங்கள குடியேற்றத்திலுள்ளவர்களே திருகடலூர் என்ற தமிழ் கிராமத்தினை சேர்ந்த தமிழ் மீனவர்கள் மீது கல் வீசி தாக்கியதில் திருகடலூரை சேர்ந்த தமிழ் மீனவர்களே காயம் அடைந்துள்ளனர்.


No comments