புத்தாண்டில் புதிய நாவல் அறிவிப்பை வெளியிட்ட தீபச்செல்வன்


ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தனது புதிய நாவல் குறித்த அழைப்பை புத்தாண்டு தினமான நேற்று வெளியிட்டிருந்தார். சைனைட் என்பதே தீபச்செல்வன் எழுதும் புதிய நாவலின் பெயர்.

நடுகல், பயங்கரவாதி நாவல்கள் வாயிலாக பெரும் கவனம் பெற்ற தீபச்செல்வன், நடுகல் சிங்கள மொழியாக்க நாவல் வாயிலாக சிங்கள மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தான் எழுதும் புதிய நாவலான சைனைட் குறித்து புத்தாண்டு தினத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குறியீடாக கருதப்படும் சைனைட், போராளிகளின் கழுத்தில் தொங்கும் முக்கிய ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் சைனைட் எனப் பெயரிடப்பட்ட தீபச்செல்வனின் புதிய நாவலின் பெயர், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை நாவல் அறிவிப்புடன், நஞ்சை உண்டு ஆடும் சிவனின் ஆட்டத்தை காண அழைக்கும் திருநாவுக்கரசரின் பதிகமும் மேற்கோளிட்டப்பட்டுள்ளது.

No comments