ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தமை: டொனால்டு டிரம்ப் மீது குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு


அமெரிக்காவில் ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் நடுவர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் அந்நாட்டின் வரலாற்றிலேயே இதுபோன்ற குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் என்ற பெயரை ட்ரம்ப் பெற்றுள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டாலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான பிரச்சாரத்தைத் தொடரப் போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இது அரசியல் ரீதியான துன்புறுத்தல் என்றும், வரலாற்றிலேயே மிக உயர்ந்த தேர்தல் தலையீடு என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.  டிரம்ப் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சனைகளில் ஒன்றான  மன்ஹாட்டன் விசாரணையால், அவர் மீண்டும் அதிபராகும் முயற்சி பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். 10 அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, காணொளி ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்ப்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.

டிரம்பிற்கு மிகப்பெரிய பின்னடைவும் தேர்தலில் ஏற்பட்டது. இதற்கு பிறகு, இந்த விவகாரம் தலைதூக்காமல் இருக்கவும், இதுகுறித்து பேசாமல் இருக்கவும் 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் நடிகைக்கு வழங்கப்பட்டதாக இன்னொரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பணம், பிரச்சார நிதியில் இருந்து சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2016 பிரச்சாரத்தின் போது ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் நடுவர் மன்றம் குற்றம் சாட்டியது. இது குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக அவரை மாற்றியது.



No comments