மாதகல் ஆலயத்தில் சங்கிலி அறுப்பு - பெண் உள்ளிட்ட இருவர் மறியலில்!


ஐந்தரைப் பவுண் தங்க நகையை திருடிய குற்றத்தில் கைதான பெண் உட்பட இருவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன் கோவிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டது. 

 முச்சக்கர வண்டியில் வந்த மூவர் கொண்ட குழுவே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என விசாரணைகளில் கண்டறிந்த இளவாலை பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளதுடன் ஒரு பெண் தலைமறைவாகியுள்ளார். 

கைதான இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

No comments