ரங்கா அனுராதபுர சிறைச்சாலையில்!



கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவை அனுராதபுர சிறைச்சாலையில் எதிர்வரும் மே 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.மொஹமட் நிஹால் உத்தரவிட்டுள்ளார்.

கார் விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதோடு, சாட்சியங்களை அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments